May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கவர்னர் அலுவலம் முன்பு போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதவி

1 min read

The governor’s office prosecuted MK Stalin, who had previously protested

24/10/2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு 7. 5 சதவீத இடஒதுக்கீடுக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்காதததை கண்டித்து போராட்டம் நடத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போராட்டம்

மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கவர்னர் அறிவித்துள்ளாார். ஆனால் உடனே ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன்பு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வழக்குப்பதிவு

பாதுகாப்பு பணியில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் தலைமையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்து நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.