May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,708 பேருக்கு கொரோனா ; 4,014 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 2,708 people in Tamil Nadu today; 4,014 discharged

26/-10/-2020

தமிழகத்தில் இன்று 2,708 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் இன்று மட்டும் 4,014 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) 2,708 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 11 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 4,014 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 32 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 10,956 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.