நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா நிலவரம்
1 min readCorona situation in Nellai and Tenkasi districts
26/10/2020
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
கொரோனா பரவல் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் 13 பேரும், மானூர், பாப்பாக்குடி பகுதிகளில் தலா 2 பேரும், வள்ளியூர் பகுதியில் 3 பேரும், களக்காடு, சேரன்மாதேவி, ராதாபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்றுடன் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தன்போது இந்த மாவட்டத்தில் 394 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முதியவர் ஒருவர் இறந்தார். இவரையும் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 208 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 777 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 474 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 152 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மட்டும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 694 ஆக உயர்ந்து உள்ளது. இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 70 ஆக உயர்ந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 497 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி கொரோனாவுக்கு இறந்து உள்ளார். இவரையும் சேர்த்து இந்தமாவட்டத்தில் இதுவரை 127 பேர் இறந்து உள்ளனர்.
தென்காசியில் இன்று…
தென்காசி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சங்கரன்கோயிலில் ஒருவரும், செங்கோட்டையில் ஒருவரும், தென்காசியில் 2 பேர்களும் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 12 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். 2 பேர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மொத்தம்142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு இதுவரை 15,605 பேர் வெளியிடங்களில் இருந்து வந்துள்ளனர். அரசு கோவிட்-19 மையத்தில் ஒருவர் உள்ளார். தென்காசி மாவட்டத்தில் இதுவரை1 லட்சத்து 13 ஆயிரத்து 85 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 522 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 25 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,788 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பூர்ண குணமாகி வீடுகளுக்கு அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 7,494 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.