June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

காதல் கல்யாணம் பற்றி நடிகை காஜல் அகர்வால்

1 min read

Actress Kajal Agarwal talks about romantic marriage

2/11/2020

நடிகை காஜல் அகர்வால், கவுதம் கிச்சலுவுடன் காதல் உருவானது பின்னர் திருமணம் கைகூடியது எப்படி என்பது குறித்து சுவைபட கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் கடந்த மாதம் 30-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர்.

காதல் உருவானது எப்படி?

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் முதன்முதலாக காஜல் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தனக்கு காதல் உருவானது எப்படி என்பது குறித்து கூறினார்.
அவர் கூறியதாவது:-
எனக்கு கவுதமை 10 வருடங்களாக தெரியும், 7 வருடம் நண்பர்களாக இருந்தோம், கடந்த 3 ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் கவுதம் என்னிடம் காதலை சொன்னார். அது ஒரு எமோஷனலான தருணம். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் என் பெற்றோரை சந்தித்து கவுதம் பேசினார். அவர்கள் சம்மதித்ததால் எங்கள் திருமணம் நிச்சயமானது.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.