ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2020/11/deepavali-02-1024x683.jpg)
Deepavali is celebrated for five days
13/11/2020
தீபாவளி பண்டிகையை வடநாட்டில் 5 நாட்கள் கொண்டாடுவார்கள். தீபாவளிக்கு முன்தினம் திரயோதசி திதி அன்று யம தீபம் ஏற்ற வேண்டும். அதாவது சூரிய அஸ்தமனத்துக்கு முன் வீட்டிற்கு வெளியில் தெற்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் எத்தனை பேர் உள்ளார்களோ அத்தனை தீபம் ஏற்ற வேண்டும். இப்படி வழிபடுவதால் வீட்டில் உள்ளவர்கள் நோய்நொடி இன்றி வாழ்வார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். தீபாவளியை யட்டி அமாவாசை அன்று கேதார கவுரி விரதம் இருப்பார்கள். அதற்கு மறுநாள் அதாவது நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம் செய்வார்கள். ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை யாக கொண்டாடுவார்கள்.