June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கேதார கவுரி விரதம்

1 min read


Kedar Gauri fasting தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை நாளில் கேதார கவுரி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆண்டு தீபாவளி அன்று (14-11-2020) பகல் 2.02 மணிக்கு அமாவாசை ஆரம்பத்துவிடுவதால் அன்றே கேதார கவுரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
கோதாரேஸ்வரர் என்றால் சிவபெருமானை குறிக்கும். கவுரி என்றால் பார்வதி. சிவபெருமான்&பார்வதி தேவியை நோக்கி விரதம் இருந்து வழிபடுவதுதான் கேதாரகவுரி விரதம். இந்த விரதத்தை தீவிரமாக கடைபிடிப்போர் அமாவாசைக்கு 21 நாட்களுக்கு முன்பே தசமி திதியில் ஆரம்பிக்க வேண்டும். அப்படி முடியாதவர்கள் இந்த அமாவாசையில் விரதம் மேற்கொள்ளலாம். வீட்டில் ஒரு கலசத்தில் சிவனை ஆவாஹனம் செய்து அல்லது சிவன்&பார்வதி படத்தை வைத்து பூஜக்கலாம். பூஜை முடிந்ததும் பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கலாம். இந்த பூஜையை நடத்தினால் கணவன்&மனைவி ஒற்றுமை மேலோங்கி மகிழ்ச்சியாக வாழ்வர். அவர்களுக்குள் கருத்துவேறுபாடு இருந்தால் அது மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.