June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 மிதுனம்

1 min read

Kuru peyarchi Palangal 2020-2021 Gemini


சீரிய சிந்தனையும்,நல்ல பேச்சாற்றலும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! யார்தயவும் இன்றி சொந்தகாலில் நின்று முன்னேற நினைப்பீர்கள்.இது வரை குருபகவான் உங்கள்ராசிக்கு7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள்.பணப்புழக்கம் அதிகரித்- திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8-ம் இடத்தில் இருக்கும் குருபகவான்பொதுவாக மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார்.வீண்விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் அந்த வகையில் உங்களு- க்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரைஅதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். .இந்த காலக்கட்டத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்திஆகும்.குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
செலவுகள்அதிகரிக்கும்.சிக்கனத்தை கடைபிடிப்பதுநல்லது. முக்கிய காரியங்களை பெரியோர்களின் ஆலோசனையின்பேரில் நிறை வேற்றவும். உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.. மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். காரிய அனுகூலம் ஏற்படும். உற்சாகம் பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் சிலர் சற்று முயற்சி எடுத்து புதியவீடு கட்டுவர்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும்.
உத்தியோகம் தனியார்துறையில் வேலை பார்ப்பவர்ககளுக்கு முயற்சியில் தடை ஏற்படும். .அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியலாம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.4-4-2021 முதல் 14-9-2021 வரை தடைகள், திருப்தியின்மை போன்றவை மறையும். வேலைபளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். புதிய பதவி தேடிவரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். .எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும்.
வியாபாரம் லாபம் அதிகரிக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணலாம். சிலர் தீயோர்சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். ஆனாலும் குருவின் பார்வை பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர்.லாபம் அதிகரிக்கும்.பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. குருவால் வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.அரசு வகையில் அனுகூலம் காணப்படுகிறது. பெண்களை பங்கு- தாரராக கொண்ட வணிகம் சிறப்படையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம்.
கலைஞர்கள் கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். காரியத்தடை, பொருள் நஷ்டம், அவப்பெயர் முதலியன மறையும்.முன்னேற்றத்துக்கு பெண்கள் மிகவும் உறுதுனையாக இருப்பர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் முன்னேற்றம் காணலாம். புதிய பதவி தேடி வரும்..
மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். குருவின் பார்வை பலமாக இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிறப்பான பலனைக் காணலாம். கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பியபாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன்உள்ளதாக அமையும்.
விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். கூலி வேலை செய்வோரும் திருப்திகரமாக வாழ்வர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கு வதற்கான அனுகூலம் உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் பெண்களுக்கு தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை.பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது.4-4-2021 முதல் 14-9-2021 வரை ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
உடல்நலம் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
பரிகாரம்-வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள்.அப்போது கொண்டைக்கடலை தானம் செய்யலாம். ராமபக்தர் ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.