குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 மீனம்
1 min read
Kuru peyarchi Palankal 2020-2021 Pisces
உங்கள் ராசியின் சின்னம் மீன். அது எவர் பிடியிலும் சிச்காமல் வழுக்கி ஓடும் தன்மை உடையது. அதைப் போல் நீங்களும் எந்த பிரச்சினை -யிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசு ராசியில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்துகொண்டிருந்தார். அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் இப்போது குருபகவான் 11-ம் இடமான மகர ராசிக்கு வந்து உள்ளார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார். மேலும் அவரின்7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் நீங்காத வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். குருவால் உங்களுக்கு ஏற்பட்ட பொருள் நஷ்டம், மனதில் தளர்ச்சி,வீண் மனக்கவலை முதலியன மறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். கணவன்-மனைவிஇடையேஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு வாங்குவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியாக வீட்டிற்கு குடிபுகுவர்.
உத்தியோகம்அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.4-4-2021 முதல் 14-9-2021 வரை வேலைப் பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும்.மேல் அதிகாரி -களிடம் அனுசரித்துப் போகவும். உங்கள் பணியை வேறு நபரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.
வியாபாரம் வளர்ச்சியடையும். புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 4-2021 முதல் 14-9-2021 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதத்தை வைத்துக் கொள்ள வேண்டாம்
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். சமூகத்தில் நல்ல அந்தஸ்க்கு உயர்த்தப்படுவர்.சககலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. 4-4-2021 முதல் 14-9-2021 வரை புதிய ஒப்பந்தங்கள் பெற சற்றுமுயற்சி எடுக்க வேண்டியது இருக்கும் அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும்.
மாணவர்கள் வெற்றி கிட்டும். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். குருவால் ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பைப் பெறுவர்.4-4-2021 முதல் 14-9-2021 வரை முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு,நெல்,எள்,உளுந்து, கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை நல்ல வருவாயை கொடுக்கும்.நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். பால்பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும்
பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குரு உயர்வை தருவார். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.
பரிகாரம்: துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.4-4-2021 முதல் 14-9-2021 வரை வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபட தவறாதீர்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.ஆலங்குடி சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு 21 தீபம் ஏற்றி வழிபடுங்கள்.