July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

குரு பெயர்ச்சி பலன்கள் 2020-2021 ரிஷபம்

1 min read
Kurupeyarchi Palankal 2020-2021 Taurus


                                 13-11-2020

பொறுமையும் நிதானமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் அமைதியாக இருந்து எதையும் சிறப்பாக செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்.இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை தரும் வகையில் அமையும். இதுவரை குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார்.இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதைவிட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும் போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும். பொருளாதாரத்தில் திடீர்சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண்விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குருபகவான் 9-ம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள்.மனமகிழ்ச்சிஅதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள்.இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் குருபகவான் அவர் 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.
இனி முக்கிய கிரகங்களை அடிப்படையாக கொண்டு பொதுவான பலனைக் காணலாம்.
பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.செல்வாக்கு அதிகரிக்கும்.வீட்டில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உருவாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்க பெறுவர்.சிலர் புதியவீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். குழந்தை பாக்கியம் பெறுவர். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
4-4-2021 முதல் 14-9-2021 வரை தடைகள் பல குறுக்கிட்டாலும் உங்களின் தீவிர முயற்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர் வகையிலும் அவ்வளவு அனுகூலம் காணப்படவில்லை. சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். ஆனால் குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
உத்தியோகம்: சிறப்பான முன்னேற்றம் காணலாம். சம்பள உயர்வு வரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர்.வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. 4-4-2021 முதல் 14-9-2021 வரை வேலையில் .பொறுமையும், நிதானமும் தேவை. வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். மேல் அதிகாரிகளிடம் சற்று அனுசரித்து போகவும். சிலருக்கு வேலையில் வெறுப்பு வரும். சிலர் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் தோன்றும். குருவின் பார்வை பக்கபலமாக இருப்பதால் எந்த விபரீத விளைவும் ஏற்பட்டு விடாது.
வியாபாரம்: பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். குருவால் நல்ல லாபத்தை பெறலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 4-4-2021 முதல்14-9-2021வரை பகைவர்களின் தொல்லைகள் இருக்கும். பண விஷயத்தில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
பொதுநலம்: அரசியல்வாதிக பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மறையும்.புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். சமூகநலசேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்க பெறுவர். 4-4-2021 முதல் 14-9-2021 வரை கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள்: வெற்றி கிடைக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறலாம். 4-4-2021 முதல் 14-9-2021 வரைஅசட்டையாக இருந்து விட வேண்டாம். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயம்: கால்நடை வளர்ப்பவர்கள் நல்ல பலனை காணலாம். மஞ்சள் மொச்சை, கடலை, நெல் போன்ற தானியங்கள் நல்ல மகசூலை கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். சமரசபேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்லது.
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். உங்ளால் குடும்பம் சிறக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 4-4-2021 முதல் 14-9-2021 வரை சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.
உடல் நலத்தை பொறுத்தவரை சிறப்படையும். கேதுவால் சிற்சில பாதிப்புகள் வந்தாலும் நொடிப்பொழுதில் மறைந்துவிடும்.
பரிகாரம்- ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஆதரவற்ற முதாட்டிகளுக்கும், சன்னியாசி களுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள். 4-4-2021 முதல் 14-9-2021 வரை குருபகவானுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி யை வழிபடலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.