ரஜினிகாந்த் நாளை முக்கிய அறிவிப்பு
1 min readRajinikanth tomorrow, important announcement
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவத்தார். அதன்பின் உடல் நலம் குறித்து வந்த தகவலால் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி பல்வேறு ஊடகங்கள் விவாதங்கள் செய்து வருகின்றன.
தப்போது தமிழக சட்டசபை தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் பிரசார களத்தில் இறங்கிவிட்டனர்.
இதனால் ரஜினி ரசிகர்களும், ரஜினியின் ஆதரவாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்து, நாளை( திங்கட்கிழமை) தன் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள்
இதற்காக, அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, நாளை காலை 9 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ஆலோசிக்கும் ரஜினி, அதன்பின், தன் அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், மத்திய மந்திரி அமித் ஷா சென்னை வந்து சென்ற நிலையில், ரஜினியின் இந்த ஆலோசனை அறிவிப்பு, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
பாதுகாப்பு கோரி மனு
இந்த கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி மன்றம் சார்பில் கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 50 பேர் பங்ககேற்க உள்ளனர். மாஸ்க் அணியவும் ,சமூக இடைவெளியை பின்பற்றவும், அறிவுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் வழிகாட்டுதலையும் பின்பற்றுகிறோம். உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.