தென் தமிழகத்தில் 2-ந் தேதி அதி கனமழை; வட தமிழகத்தில் கனமழை
1 min readHeavy rains in southern Tamil Nadu on December 2; Heavy rain in northern Tamil Nadu
29/11/2020
தென் தமிழகத்தில் வருகிற 2-ந் தேதி அதி கனமழைக்கும் வட தமிழகத்தில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல்
வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் வட தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. அந்தப் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்து திருவண்ணாமலை வழியாக ஆந்திரா சென்ற பலவீனம் அடைந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறவித்து இருக்கிறது.
அதன்படி புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும்.
அதிகனமழை
மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2-ந்தேதி (புதன்கிழமை) தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது டிசம்பர் 2-ந்தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.