நடிகர் பார்த்திபனும் அரசியலுக்கு வருகிறார்
1 min read
Actor Parthiban is also coming into politics
15/12/2020
நடிகர் பார்த்திபனும் அரசியலுக்கு வரப்போவதாக கூறினார்.
அரசியல் ஆசை
நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகமாகவே வருகிறது. எம்.ஜி.ஆர். சினிமாவில் நடித்து ஆட்சியை பிடித்தது போல் தாங்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அந்த வகையில்தான் தற்போது கமல்ஹாசனும், ரஜினியும் அரசியலுக்கள் நுழைந்து இருக்கிறார்கள்.
நடிகர் விஜய் கூட அவ்வப்போது அரசை விமர்சித்து வருகிறார். வருங்காத்தில் அரசியலில் குதிக்க இது ஒரு அஸ்திவாரம் என்று பேசப்படுகிறது.
நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி ஆகியோரும் சமுதாய சிந்தனை என அரசியல் நடவடிக்கையை விமர்சிசத்து வருகிறார்கள்.
பார்த்திபன்
இந்த நிலையில் நடிகர் பார்த்திபமும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளார்.
புதுவை அரசு சார்பில் இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று ( செவ்வாய்க்கிழமை) அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், “எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன். தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியை வழங்குவார்கள். நடிகர்கள் என்பதால் அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லை” என பேசினார்.