May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் சஸ்பெண்டு

1 min read

Environmental Superintendent Pandian Suspended

18/12/2020

சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்டு செய்து சுற்றுச்சூழல்துறை உத்தரவிட்டுள்ளது.

பாண்டியன்

ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுச்சூழல் கண்காணிப்பாளராக இருந்தவர் பாண்டியன். இவரது வீடு, அலுவலங்கள் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.37 கோடி பணம் உள்பட ரூ. 10 கோடி மதிப்பு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனை சஸ்பெண்டு செய்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில் பாண்டியனை சஸ்பெண்டு செய்தது சுற்றுச்சூழல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

லஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் நகை, பணம் சேர்த்தது அம்பலமானதால் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. சென்னை, புதுக்கோட்டையில் உள்ள வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.