அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500
1 min readPongal gift for rice ration card holders is Rs. 2,500
19/12/2020
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் ரூ.100 வழங்கப்பட்டு வந்தது. பின்னர் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
கடந்த பொங்கலின் போது அரிசி அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 வழங்கப்பட்டது.
2,500 ரூபாய்
இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று( சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜனவரி 4-ந் தேதி முதல் வழங்கப்படும். வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும். எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.