மதுரை சிறையில் கைதி தற்கொலை
1 min readrisoner commits suicide in Madurai jail
18/12/2020
மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைதி
மதுரை திடீர் நகர் அலாவுதீன் தோப்பை சேர்ந்தவர் நாசர். இவர் கடந்த 2003 ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்தார். இந்த நிலையில் கைதிகள் தங்கியிருந்த அறையில் நாசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாத கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று நாசரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.