May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க அனுமதி

1 min read

Devotees are allowed to bathe at Thiruchendur beach

18/12/2020

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளித்தது. இதனை அடுத்து பக்தர்கள் கடலில் குளித்தனர்.

திருச்செந்தூர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோவில் உள்பட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் செப்டம்பர் 1-ந் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

திருச்செந்தூரில் கடலில் பக்தர்கள் நீராட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 9 மாதங்களுக்குப் பின் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மொட்டை அடிப்பது, காதுகுத்துதல் போன்றவற்றுக்கு தடை தொடரும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.