10-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் சுட்டுக்கொலை-இன்னொரு மாணவன் ஆத்திரம்
1 min read10th grade student shot dead in classroom
31/12/2020
உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில், 14வயது மாணவன் இன்னொரு மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
துப்பாக்கி கலாசாரம்
வன்முறையின் ஆயுதம் துப்பாக்கி. அது வெளிநாட்டைப்போல மாணவர்கள் கையிலும் தவழத் தொடங்கிவிட்டது. துப்பாக்கியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அதை பாதுகாப்புக்காக வைத்திருப்பவர்கள்கூட அனுமதி பெற்றுதான் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த துப்பாக்கியே ஒரு மாணவன் மூலம் இன்னொரு மாணவனின் உயிரைப் பறிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்தக் கொடூர சம்பவம் உத்தரபிரசேதத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே இடத்தை பிடித்து உட்காருவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர்களுக்குள் மோதலாக மாறியது.
சுட்டுக்கொலை
இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன், தன்னுடைய வீட்டிலிருந்த துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் புத்தகங்களோடு எடுத்து வைத்துக் கொண்டுவந்து பள்ளிக்கூடம் வந்தான். அவன் வகுப்பறையில் அந்த எதிரி மாணவனை துப்பாக்கியால் சுட்டான். இதில் அந்த மாணவன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து புலந்த்ஷாஹர் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்குமார் சிங் கூறியதாவது:
உட்காரும் இடத்திற்காக இரு மாணவர்களும் நேற்று(புதன்கிழமை) சண்டை போட்டுள்ளனர். அதில் ஒரு மாணவன், ராணுவத்தில் வேலை செய்யும் அவரது மாமாவின் வீட்டிற்குச் சென்று அவரின் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான்.
வகுப்பறையில், இன்று(வியாழக்கிழமை) காலை அவனுடன் சண்டையிட்ட சக மாணவனை மூன்று முறை சரமாறியாக சுட்டுள்ளான். இதில், சுடப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதையடுத்து, சுட்ட மாணவனை கைது செய்து, அவனின் பையை சோதனை செய்ததில் மற்றொரு நாட்டு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. அந்த மாணவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.