April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 21,821 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 21,821 people in a single day in India

31.12.2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 21,821 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரத்திற்குள் உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா நிலவரம் குறித்து தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( புதன்கிழமை) ஒரே நாளில் 21,821 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 299 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,48,738 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்றுமட்டும் 26,139 பேர் குணம் அநைடதுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98,60,280 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 2,57,656 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.