May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அங்கன்வாடி பெண் ஊழியர் கற்பழித்துக் கொலை

1 min read

Anganwadi female employee raped and killed

6.1.2021

உத்தரபிரதேசத்தில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

அங்கன்வாடி ஊழியர்

உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தைச் சேர்ந்த 50-வயது பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்றார்.

கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய அந்த பெண்ணை காரில் வந்த 3 பேர் கடத்தி சென்றனர்.
அவர்கள் காட்டுப்பகுதிக்கு கொண்டு கற்பழித்தனர். காமகொடூரர்களுடன் அந்தப்பெண் போராடியபோது, அவர்கள் கொடூரமாக தாக்கினார்கள். இதில் அவரது இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்தன.

சாவு

கோவிலுக்கு சென்ற பெண் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடினார்கள். அதிகாலையில் அவரை கண்டுபிடித்தனர். சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெண் டாக்டர் உள்பட 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது.

குற்றவாளிகளை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்தப்பகுதியைச் சேர்ந்த மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம், டிரைவர் ஜெயபால் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.