May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னை மின்சார ரெயிலில் பெண் கற்பழிப்பு

1 min read

Female rape on Chennai electric train

10.1.2021

சென்னை தாம்பரத்தில் மின்சார ரெயிலில் மது போதையில் தூங்கிய பெண்ணை துப்புரவு தொழிலாளி கற்பழித்தார்.

மின்சார ரெயில்

செங்கல்பட்டு அடுத்த பரனுரை சேர்ந்த 40 வயதான ஒரு பெண், கடந்த 8-ந் தேதி இரவு பல்லாவரத்தில் இருந்து பரனூர் செல்ல செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் ஏறினார். அந்தப் பெண் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் ரெயிலேயே அயர்ந்து தூங்கி விட்டார்.
இதனால் அந்த மின்சார ரெயில் செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மீண்டும் கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்று, மீண்டும் தாம்பரம் வந்து அங்குள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது-.

கற்பழிப்பு

நள்ளிரவு 1 மணியளவில் அப்பெண் திடிரென போதை தெளிந்து கண் விழித்து பார்த்தபோது பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவு நேரம் என்பதால் வெளியே செல்ல பயந்து ரெயில் உள்ளேயே இருக்க முடிவு செய்தார்.
அப்போது அங்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் சுரேஷ் (30), அப்துல் அஜிஸ் (30) ஆகிய இருவரும் தனியாக இருந்த பெண்ணை வலுகட்டாயமாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு நடந்ததை வெளியே கூறக்கூடாது என மிரட்டினார்களாம்.
ஆனாலும் விடிந்த பின் அப்பெண் தனக்கு நேர்ந்த கதி குறித்து தாம்பரம் ரெயில்வே போலீசாரிடம் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் இருவரையும் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.