காங். அமைச்சரை பா.ஜ.க. முதல்வர் என கோஷமிட்டதால் பரபரப்பு
1 min readCong. Minister of BJP Excitement as he chanted as Chief-minister
18.1.2021
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் அமைச்சரை பா.ஜனதா முதல்-அமைச்சர் வேட்பாளர் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் அமைச்சர்
பாண்டிச்சேரியல் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. எனவே அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் நமச்சிவாயம்தான் முதல்-அமைச்சர் என்று பிரசாரம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகும் அவர்தான் முதல்வர் ஆவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் முன்னாள் மத்திய மந்திரியான நாராணசாமி முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டார். கட்சி மேலிடம் பல மொழிகள் பேசத் தெரிந்த நாராயணசாமியால்தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறி நமச்சிவாயத்தை சமாதானம் செய்தது–. இதனை அடத்து நமச்சிவாயம் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
கோஷம்
இந்த நிலையில் மண்ணாடிப்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் நமச்சிவாயம ஆதரவாளர். இதனால் அந்த விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார்.
விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை, அவரது ஆதரவாளர்கள் வருங்கால முதல்- அமைச்சர் நமச்சிவாயம் என்றும் புதுவையில் தாமரை ஆட்சி மலரும் என்றும் பா.ஜனதா முதல்- அமைச்சர் வேட்பாளர் வாழ்க என்றும் கோஷமிட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சிலர் நமச்சிவாயத்துக்கு பா.ஜனதா கட்சி காவி துண்டு அணிவித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அதோடு அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட பேனர்களில் அமைச்சர் நமச்சிவாயத்தின் படத்தை தவிர, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாருடைய படமும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.