May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 438 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 438 people in Tamil Nadu today

20.2.2021

தமிழகத்தில் இன்று 438- பேருக்கு கொரோனா பரவல் கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்றைய கொரோன நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) 438- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 47- ஆயிரத்து 823- ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரு நாளில் மட்டும் 459- பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 6 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். அதாவது சென்னையில் 3 பேரும், செங்கலம்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 4,120- ஆக உள்ளது.

சென்னையில் இன்று புதிதாக 139- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 47 பேருக்கும், நெல்லையில் 4 பேருக்கும், தென்காசியில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் ஒருவருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.