May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனா 442 ஆக குறைந்தது

1 min read

In Tamil Nadu today the corona has dropped to 442

23.2.2021
தமிழகத்தில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 166 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்கியவர்களில் இன்று மட்டும் 453 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 32 ஆயிரத்து 620 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 4, 074 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் மட்டும் 148 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மராட்டியம்

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது 6 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்படி நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாக 3 நாட்களுக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதாவது புதிதாக 5 ஆயிரத்து 210 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில், மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. அம்மாநிலத்தில் இன்று 6,218- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 51- பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,869- ஆக உள்ளது.

கேரளா


கேரளாவில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,034- ஆக உள்ளது. அதேபோல் தொற்று பாதிப்பால் இன்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பை கண்டறிய 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனாவில் இருந்து இன்று 4,823 பேர் கேரளாவில் குணம் அடைந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.