May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 10,584 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 10,584 people in a single day in India

23.2.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக கொரோனா எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. அதே நேரம் நேற்று சற்று குறைந்தது.
இந்திய அளவில் கொரோனா பரவல் பற்றி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டத் தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( திங்கட்கிழமை) புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,16,434 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 78 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,463 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,255 பேர் கொரேனனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,12,665 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1,47,306 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 1,17,45,552 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.