தமிழகத்தில் இன்ற 474 பேருக்கு கொரோனா
1 min readCorona for 474 people in Tamil Nadu today
1.3.2021
தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை) 474 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரேனா£வால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,52,016 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,501 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 482 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,35,506 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,009 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,35,721 ஆக உயர்ந்துள்ளது.