தமிழகத்தில் இன்று கொரோனா 543 ஆக அதிகரிப்பு
1 min readCorona increased to 543 in Tamil Nadu today
5.3.2021
தமிழகத்தில் இன்று கொரோனா 543 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. ஆனால் இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்றை கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெயிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 543 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,513 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 562 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,37,525 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3,954 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,36,485 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக…
தமிழகத்தில் இன்று கொரேனா கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக வருமாறு:-
அரியலூர் – 1
செங்கல்பட்டு – 46
சென்னை – 225
கோவை – 51
கடலூர் – 6
தர்மபுரி – 1
திண்டுக்கல் – 7
ஈரோடு -10
கள்ளக்குறிச்சி – 0
காஞ்சிபுரம் – 20
கன்னியாகுமரி – 6
கரூர் – 1
கிருஷ்ணகிரி – 1
மதுரை – 10
நாகை – 4
நாமக்கல் – 3
நீலகிரி – 3
பெரம்பலூர் -1
புதுக்கோட்டை – 5
ராமநாதபுரம் – 1
ராணிப்பேட்டை – 1
சேலம் – 7
சிவகங்கை – 2
தென்காசி – 4
தஞ்சை – 14
தேனி – 1
திருப்பத்தூர் – 1
திருவள்ளூர் -33
திருவண்ணாமலை – 3
திருவாரூர் – 4
தூத்துக்குடி – 1
திருநெல்வேலி – 6
திருப்பூர் – 25
திருச்சி – 11
வேலூர் – 14
விழுப்புரம் – 3
விருதுநகர் – 6