தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் ஐகோர்ட்டில் கட்டுப்பாடு அதிகரிப்பு
1 min readIncreased control inhigh Court due to increase in corona in Tamil Nadu
6/3.2021
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. அதாவது ஜனவரி மாதத்தில் இருந்து தினமும் 500-க்கும் கீழ் பதிவாகி வந்தது. இதனால் பல்வேறு துறைகளில் ஊரடங்கு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளநிலையில் பாதுகாப்பு கருதி மார்ச் 8ந் தேதி (திங்கட்கிழமை) முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை ஐகோர்ட்டில் மற்ற வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே ஆஜராக வேண்டும் என்றும், வழக்கறிஞர்களின் அறைகள் மூடப்படும் என்பதால் நாளை வரை ஆவணங்களை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.