“கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி
1 min read“Pon.Radhakrishnan contest in Kanyakumari Parliamentary constituency
6.3.2021
கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதோடு இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதவாது:&
வசந்தகுமாருக்கு ஒத்துழைப்பு
கட்சியின் தலைமை என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததிற்கு நன்றி. அமைச்சராக பதவி வகித்தபோது நான் எப்படி செயல்பட்டேன் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே இந்தமுறை மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பொதுமக்கள் எனக்கு அளிப்பார்கள். நான் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தபோது, பணிகள் பாதியில் நின்று போகக் கூடாது என்பதற்காக அப்போதைய எம்.பி. வசந்தகுமாருக்கு முழு ஒத்துழைப்பை அளித்தேன்.
இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் நான் முன்னெடுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்படும். பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் கொண்டுவரப்போவதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன். குமரியை முதல் மாவட்டமாக உயர்த்துவேன்.