அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கருணாஸ் கட்சி விலகல்; தனித்து போட்டியிடப்போவதாக அறிவிப்பு
1 min readKarunas’ withdrawal from the ADMK alliance; Announcement of standing alone
6.3.2021
அதிமுக கூட்டணியில் இருந்து நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகி உள்ளது. 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக – நடிகர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
கருணாஸ்
நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விலகல்
முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்:
முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்.
கூவத்தூரில் சசிகலா முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதா புகைப்படம் முன்பு சத்தியம் செய்தனர்.
என கூறினார்.