பெற்றோர் பிரிய முடியாமல் கதறி அழுத மணமகள் பரிதாப சாவு
1 min readThe tragic death of the bride who cried when her parents could not separate
7.3.2021
திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுத மணமகள் திடீரென பரிதாபமான இறந்தார்.
திருமணம்
ஒரிசா மாநிலத்தில் சோனேபூர் என்ற பகுதியில் குப்தேஸ்வரி என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் கணவருடன் செல்லும் முன் பெற்றோரிடம் இருந்து விடைபெறும் போது மணமகள் தேம்பி தேம்பி அழுதார். சிறிது நேரத்தில் குப்தேஸ்வரி தடீரென்று மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணப்பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திருமணமாகி ஒரு சில மணி நேரத்தில் பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் அழுத மணமகள் பரிதாபமாக உயிரிழந்தது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது