இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 4 கோடியை தாண்டியது
1 min readThe corona vaccine has crossed 4 crore in India
20.3.2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 4 கோடியை தாண்டியது
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
- இந்தியாவில் ஒரே நாளில் 27.23 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 3.48 கோடி பேருக்கும், 2வது டோஸ் 72.21 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.
- நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40.60 லட்சம், ராஜஸ்தானில் 40.47 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இதுவரை 19.64 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.