தமிழகத்தில் இன்று 1,636- பேருக்கு கொரோனா; 2வது அலை இல்லை என அதிகாரி தகவல்
1 min readCorona for 1,636 people in Tamil Nadu today; Official informed that there was no 2nd wave
23.3.2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
1,636-பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த மார்ச் 1&ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 440-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 1,023-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரொனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆகும். இதில் சென்னையில் 5 பேரும், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தலா 2 பேரும், தஞ்சை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 80,634- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
நெல்லை
இன்று சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 167 பேருக்கும், திருவள்ளூரில் 86 பேருக்கும், தஞ்சையில் 72 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 56 பேருக்கும், நெல்லையில் 10 பேருக்கும், தென்காசியில் 11 பேருக்கும், தூத்துக்குடியில்11 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
2வது அலையா?
தற்போது தமிழகத்தில் கொரோனா 2வது அலையா என்ற சந்தேகத்திற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தொடர்பில் இல்லாத மூன்று நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், , 2வது அலை என கூற முடியாது.
உருமாறிய கொரோனா உள்ளதா என கண்டறிய மாதிரிகள் புனேவுக்கும் ஐதராபாதுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாமல் இருப்பது மக்கள் கையில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.