April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை

1 min read

Prime Minister Modi’s visit: Flights will be banned in Pondicherry today and tomorrow

29/3/2021

பிரதமர் மோடி நாளை(செவ்வாய்க்கிழமை) தமிழகம் மற்றும் புதுவையில் பிரசாரம் செய்கிறார். இதையட்டி புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மோடி வருகை

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜனதா சார்பில் தலைவர்களின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நாளை( செவ்வாய்க்கிழமை) காலையில் திருப்பூர் அருகே தராபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்பின் பிற்பகல் புதுச்சேரி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி வரும் நாளை புதுச்சேரி வருகை தரவுள்ளார். அங்கு அவர் ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெறும் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி நாளை புதுச்சேரி செல்வதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இதனை முன்னிட்டு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 144 பிரிவின் கீழ் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.