சரத்பவார் ஆஸ்பத்திரியில் அனுமதி; 30-ந் தேதி ஆபரேஷன்
1 min readAdmitted to Sarabhavar Hospital; Operation on the 30th
29.3.2021
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சரத்பவார். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமாக இருக்கிறார். இவர் இதற்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். அதன்பின் 2004 ஆம் ஆண்டில் இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக மார்ச் மாதம் 31&ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அவரது கட்சி இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் வெளியிட்டு உள்ள டுவிட்டில் “சரத் பவார் நேற்று மாலை வயிற்றில் சிறிது வலியை உணர்ந்ததாகவும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரது பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது. மேலதிக அறிவிப்பு வரும் வரை அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று கூறி உள்ளார்.