May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

துலாம்/2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Dhulam/ Tamil new year palan kaliyur narayanan
துலாம்
துலாம் ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டின் தொடக்தில் குருபகவான் அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார்.திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்திவைப்பார்.பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார்.பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப்பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 4-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சுமாரான இடம் தான். அப்போது குரு மன உளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார். ஆனால் அவர் குரு 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 5-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அதன் பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் உடல்நலம் பாதிக்கப்படும். மனதில் தளர்ச்சி ஏற்படும்
சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நன்மை கிடைக்கும். மேலும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே.
ராகு தற்போது 8-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். 21-3-2022 அன்று ராகு 7-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேர சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும்
தற்போது கேது 2-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் நன்மை தர இயலாது.. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகவும் வாய்ப்பு உண்டு. கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான சிம்மத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 21-3-2022 அன்று கேது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் சிறுசிறு தடையையும், உடல் உபாதையையும் தரலாம்.

குரு அதிசார பலன்கள்
குரு குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகுவெளியில்பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லை யென்றால் வீண்மன உளைச்சலு -க்கு ஆளாவீர்கள்
உத்தியோகம் குரு உயர்வை தருவார். புதிய பதவி கிடைக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு வேலையில் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம்.
வியாபாரம் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எது எப்படியானாலும் குருவின் பலத்தால் அவை அனைத்தையும் முறிடிக்கும் வல்லமை கிடைக்கும்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். வாடிக்கையாளரை அதிக முயர்ச்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேறம் அடையலாம்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி பெறுவர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும். விரும்பிய பாடங்களை பெறுவர்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தில் உங்களின் அனுகுமுறை கண்டிப்பாக தேவைபடும். தோழிகளால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சிறப்பு பெறுவர். வேலைக்குசெல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம்.

ஆண்டின் பிற்பகுதி
சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் பிரச்சினை அகன்று அன்னியோனியம் பிறக்கும். அதோடு அவர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை காணலாம். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருட்டு பயம் மறையும்.
உத்தியோகம் வேலையில் திருப்தி காண்பர். மேல் அதிகாரிளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
வியாபாரிகளுக்கு பணவிரயம், பணம் திருட்டு போன்றவை தடுக்கப்படும். கணினித் தொழில், தரகு, ஆன்மிகம் தொடர்பாக தொழில் போன்றவை சிறப்படையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம்.பணவிரையம் ஏற்படலாம். சிக்கனம் தேவை. எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். சற்று கவனம் தேவை.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். பொதுநல சேவகர்கள்அரசியல்வாதிகள்சிறப்பான பலனை காணலாம்.
மாணவர்கள் முன்னேற்றம் காணலாம். படிப்பில் ஆர்வம் பிறக்கும். நல்ல மதிப்பெண்கள், போட்டி -களில் வெற்றி போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல வளத்தை காண்பர். விளைச்சல் சிறப்பாக இருக்கும். பசுவளர்ப்பு மற்றும் பயறு வகைகள் மூலம் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமான தீர்ப்பு வந்து கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி -கள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்- பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பல வண்ணம் நிற துணிகளை கொடுத்து வாருங்கள். சனிபகவானுக்கு எள்சோறு படைத்து அதை காக்கைக்கு போடுங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரை வணங்கி வாருங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.