May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கன்னி/2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Kanni/ Tamil new year palan kaliyur narayanan
கன்னி
கன்னி ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டின் தொடக்தில் குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்கு -வார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 5-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் சிறப்பான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி-வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக அமையும். இதனால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். அவர் 13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 6-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை.அதன்பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 7-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை தந்து மகிழ்ச்சியை அதிகரிக்கச்செய்வார்.செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.தேவைகள் பூர்த்தியா -கும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.
தற்போது சனிபகவான் 5-ம் இடத்தில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனிபகவான் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொள்ளலாம். என்பது பொதுவிதி. அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். மேலும் சனிபகவான் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் வக்கிரம் அடைந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார்.
நிழல் கிரகமான ராகு தற்போது 9-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். இதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 4,7, மற்றும் 11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்சினை -யையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அவர் 21-3-2022 அன்று 8-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சிலபிரச்சினைகளை உருவாக்கலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம்.
ராகுவுக்கு இணையான நிழல் கிரகமான கேது தற்போது 3-ம் இடமான விருச்சிக ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம். அங்கு அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். 21-3-2022 அன்று கேது 2-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தர இயலாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம்.

குரு அதிசார பலன்கள்
கேது இறை அருளையும், பொருள் உதவியையும் தந்து கொண்டிருக்கிறார். தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக- வும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். புதிய வீடு-மனை வாங்க யோகம் கூடி வரும்.
உத்தியோகம்: போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.அரசு ஊழியர்கள்முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு தனியார் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிரி- களின் இடையூறு வரத்தான் செய்யும். அவர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது. கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கணினி, அச்சுத்துறை, பத்திரிகை பப்ளிகேசன், கட்டுமானஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். தங்கம்,வெள்ளி,வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தங் -கள் கிடைக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய -திருக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு ஆசிரியர்களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். வெற்றி கிட்டும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் சிறப்பு காண்பர். நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம்.ஆடு,கோழி,பசு,கால் நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதி
குடும்பத்தில் ஒவ்வொருவரும் விட்டுக்கொடு -த்து போகவும். குருபகவான் மன உளச்சலையும், உறவினர்வகையில் வீண்பகையையும் உருவாக்கு -வார். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று எச்சரிக்கையாக இருக்கும்.
உத்தியோகம்-அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு வேலைமீது வெறுப்பு வரலாம். உங்கள்பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். இருப்பினும் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடை- யேதும் இல்லை. செலவை குறைத்து சிக்கனமாக இருக்க வேண்டும்
வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழிவகை -யை தேட வேண்டும். நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் தொழிலில் முன்னேற்றம் காணலாம். எதிரிகள் வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தங்- களை பெறவேண்டியதிருக்கும். பொதுநல சேவகர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். அரசியலில் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்.
மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும்.
விவசாயம்: உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். பெண்காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.அண்டை வீட்டார்கள் வகையில் மனக்கசப்பு ஏற்படும்.
உடல்நலம் மனதில் தளர்ச்சி ஏற்படும்.
பரிகாரம்- சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். பவுர்ணமி நாளில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நைனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். நவம்பர்12-ந் தேதிக்கு பிறகு வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.அப்போது கொண்டை கடலை படைத்து தானம் செய்யவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.