May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மகரம்/2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Makaram/Tamil new year palan kaliyur narayanan
மகரம்
மகர ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டு குரு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. குருபகவான் அதிசாரம் பெற்று 2-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான அம்சம். இதனால் இடர்பாடுகள் மறையும். குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம் . பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சுமாரன இடம். அவரால் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினை -யையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அவர்13-11-2021 அன்று முழுபெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அதன்பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். அதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்படலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வகையில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தை -யும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.மேலும் அவர் 21-5-2021 முதல் 9-10-2021 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் கெடு பலன்களை தரமாட்டார்.
தற்போது ராகு உங்கள் ராசிக்கு 5-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் இன்னல்களையும், இடையூறு-களையும் தரலாம்.மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனைஆட்டிப் படைக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிக -த்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 21-3-2022 அன்று ராகு 4-ம் இடமான மேஷத்திற்கு வருகிறார். இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், சிற்சில பிரச்சினையையும் உருவாக்கலாம்.
கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் . அவர் நல்ல வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக் -கும். அவர் 21-3-2022அன்று 10-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கு அவர் உடல் உபாதைகளை தரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால் கேது பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.

குரு அதிசார பலன்கள்
கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் ஏற்படும். உங்கள் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பகைவர்களின் தொல்லையில் சிக்கி அலைக்கழிந்தவர்கள்இனி தைரியமாக செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணை -யுடன் இருப்பர்.
உத்தியோகத்தில்பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.செப்டம்பர்14-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். மேல்அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் சென்று வருவர். பெண்கள் வகையில் அனுகூலம் கிட்டும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள்.
கலைஞர்களுக்கு இடர்பாடுகள் மறையும். சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு.எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். கலைஞர்கள் செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தத்திற் -காக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள் குருசாதகமாக இருப்பதால் பின்தங்கியநிலைக்கு தள்ளமாட்டீர்கள் ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும்.
விவசாயம் புதிய சொத்து முயற்சியின் பேரில் வாங்கலாம்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம்.
பெண்களுக்கு சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண வரவு இருக்கும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்கொடுத்து போவது நல்லது.இல்லையென்றால் வீண்மன உளைச்சலு -க்கு ஆளாவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

ஆண்டின் பிற்பகுதி
உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறகும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. எனவே சற்று கவனமாக இருக்கவும்.
உத்தியோகத்தில் குருபகவானால் முன்னேற்றம் இருக்கும். வேலைப்பளு குறையும். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். மேல் அதிகாரிகளின்அனுசரணை கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம்.
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள்சரண் அடையும் நிலை ஏற்படும். கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள் சிறப்படையவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள்தொடர்ந்து சிறப்பு பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான பலனை பெறுவர். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.
விவசாயிகள் கொண்டைக்கடலை நெல், கொள்ளு, துவரை, சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும்.சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலம் மனதில் தளர்ச்சி மறையும். பயணத்தின் போது கவனம் தேவை.
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள் ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.