May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சிம்மம்/ 2021-2022 பிலவ வருட தமிழ் புத்தாண்டு பலன்கள்

1 min read

Simmam/ new year palankal
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே! இந்த பிலவ ஆண்டு குரு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. அவர் அதிசாரம் பெற்று 7-ம் இடமான கும்ப ராசியில் இருக்கிறார்.இது சிறப்பான இடம். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குரு குடும்பத்தில் சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர்வை தருவார். ஆனால் அவர் 14-9-2021 அன்று அதிசார நிவர்த்தி அடைந்து உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மகர ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக் -குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிடவாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ளவேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்துப் பார்வை சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். பிறகு 13-11-2021 அன்று முழுபெயர் -ச்சி அடைந்து 7-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது மிகவும் உயர்வான நிலை. அதன் பிறகு 14-4-2022 அன்று பெயர்ச்சி அடைந்து 8-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். நல்ல பணப்புழக்கத்தையும், காரியத்தில் வெற்றி -யையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்துள்ளது. அதன்மூலம் பொருளாதார வளத்தையும், காரியஅனுகூலத்தை -யும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான ரிஷபத்தித்தில் இருப்பது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அவர் 21-3-2022 அன்று 9-ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலாபலன்கள் மாறுபடும். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. அவரால் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
கேது தற்போது 4-ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இந்த இடத்தில் இருக்கும் போது சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினை வரும். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான மகரத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதாரவளம் அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அவர் 21-3-2022 அன்று 3-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அங்கு அவர் நற்பலனைத் தருவார். அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.

குரு அதிசார பலன்கள்
சனிபகவானால் எடுத்த காரியம் வெற்றி அடையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் இருந்து வந்த தடைகள் விலகும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் சீரான வசதி இருக்கும்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைபடலாம். மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும்.எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும்.அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் சிறப்பான பலனை பெறலாம். குருவின் பலத்தால் மேன்மை காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு கடந்த காலத்தை -விட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் ஏற்படலாம்.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும்.
வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு பணவிரயம் ஆகலாம்.எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்கள்அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்க தொடங்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண்பர்.
விவசாயத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை ஓரளவு பெறலாம். அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் திருப்திகரமாக வாழலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். குடும்பத்தினரிடம் நன்மதிப்பு பெறுவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செப்டம்பர் 14-ந் தேதிக்கு பிறகு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டிய திருக்கும்.

ஆண்டின் பிற்பகுதி
உங்கள் ஆற்றல் மேம்படும். ஆன்மிக ஆன்றோர் – களின் ஆசியும், அருளும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குரு பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உத்தியோகம் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் நிறைவேறி மகிழ்ச்சியுடன் காணப் -படுவீர்கள். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
வியாபாரிகளுக்கு தொழில் வளர்முகமாக இருக்கும்.பணப்புழக்கம் மிக அதிகமாக இருக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதிய வியாபாரம் நல்லஅனுகூலத்தை கொடுக்கும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
கலைஞர்கள் சிறப்பான பலனைக் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவைவரும்.நல்ல பணப்புழக்கமும் இருக்கும். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக்காண -லாம். பொது மக்களிடையே நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்கள்:முன்னேற்ற நிலையில் காணப்படு- வர். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர் -களின் அறிவுரை பயன் உள்ளதாக இருக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயம் வருமானத்திற்கு குறை இருக்காது. நெல், கோதுமை, பழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் இல்லை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குதூகலம் ஏற்படும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கப் பெறலாம். சகோதரர்களால் உதவி கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பா இருக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். பிள்ளைகள் நலம் மேம்படும்.
பரிகாரம்: துர்க்கை வழிபாடு துணிவையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பல வண்ணம் நிற துணிகளை கொடுத்து வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.