May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று கொரோனா 7,987 ஆக உயர்வு

1 min read

In Tamil Nadu, the corona rose to 7,987 today

15.4.2021

தமிழகத்தில் இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று (வியாழக்கிழமை) 5 வது நாளாக 7ஆயிரத்தை கடந்தது. இன்று 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) 7,987 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 262 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 95,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 4,797 பேர் ஆண்கள், 3,190 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,81,247ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,81,652 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

திருநெல்வேலி

இன்று கொரோனா அதிகபட்சமாக சென்னையில் 1360 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. திருநெல்வேலியில் 171 பேருக்கும், தென்காசியில் 67 பேருக்கும், தூத்துக்குடியில் 169 பேருக்கும் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

29 பேர் சாவு

இன்று மட்டும் 4,176 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 91 ஆயிரத்து 839 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 29 பேர் இறந்துள்ளனர். இதில் சென்றையில் 8 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர், நாகப்பட்டினத்தில் 3 பேர், திருநெல்வேலி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், செங்கல்பட்டு, மதுரை, தென்காசி, விழுப்புரம், ஈரோடு, தஞ்சை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,999 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 58,097 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இன்று காலைவரை கடந்த 24மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,038 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 93,528 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 14,71,877 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.