சென்னை வேளச்சேரி தொகுதி 92-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு
1 min readRe-polling at 92nd polling booth in Chennai Velachery constituency
17/4/2021
கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிளுக்கும் ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்கள் அந்த வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சூழலில் வேளச்சேரி தொகுதியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 92வது பூத்தில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்தில் 15வாக்குகள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வேளச்சேரி 92வது எண் கொண்ட பூத்தில் மீண்டும் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.
அதன்படி அங்கு மீண்டும் தேர்தல் பரப்புரை நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் மறு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது.