தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன
1 min readAnother 4 lakh corona vaccines arrived in Tamil Nadu
24.4.2021
தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன
51 லட்சம் பேர்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை 51 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதில் கோவேக்சின் தடுப்பூசி முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றால் கோவேக்சின் மருந்து தற்போது கைவசம் இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசி தான் கைவசம் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
முதல் டோஸ் கோவேக்சின் போட்டப்பிறகு 2-வது கட்டமாக மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டை போட்டுக்கொண்டால் ஏதாவது சிக்கல் வந்து விடுமோ என்று பயந்து நிறையபேர் மறுத்து விடுகிறார்கள்.
கோவேக்சின்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி தான் அதிக அளவில் கைவசம் உள்ளது. கோவேக்சின் அந்த அளவுக்கு இல்லை. 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் தான் உள்ளது.
சென்னையில் 10,500 கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி 1 லட்சம் கைவசம் உள்ளது. இதனால் புதிதாக கோவேக்சின் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடுவது இல்லை. நிறைய இடங்களில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போட வந்தால் நிறைய ஆஸ்பத்திரிகளில் கோவேக்சின் இருப்பு இல்லை. ஒருவாரம் கழித்து வாருங்கள் என்று திரும்பி அனுப்புகிறார்கள்.
இதனால் கோவேக்சின் 2-வது டோஸ் போடாமல் நிறையபேர் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
முதல் அமைச்சர் கடிதம்
இந்த நிலையில் தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.மேலும் செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சையில் அத்தியாவசிய மருந்தான ரெம்டெசிவிர் மருந்துகள் தமிழகத்திற்கு தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று புனேயில் இருந்து விமானம் மூலம் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து அடங்கிய 20 ஆயிரம் மருந்து பாட்டில்களை 34 பார்சல்களாக வந்தது.
4 லட்சம் தடுப்பூசிகள்
இதனை அடுத்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுமார் 4 லட்சம் தமிழகம் வந்துள்ளன . இதுகுறித்து காதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுமார் 4 லட்சம் தமிழகம் வந்துள்ளன. இதில் 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் , 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்.
இதுவரை 67.85 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன . 4 லட்சம் தடுப்பூசிகளும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.