நெல்லையில் 517 பேருக்கு கொரோனா; தென்காசியில் 2 பேர் சாவு
1 min readorona for 517 people in Nellie; 2 killed in Tenkasi
23.4.2021
நெல்லையில் இன்று 517 பேருக்கும், தென்காசியில் 173 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தென்காசியில் 2 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் இன்று மட்டும் 13.776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 78 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக இன்று 3,842 பேர் புதிதாக கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டில் 985 பேருக்கும், கோவையில் 889 பேருக்கும், திருநெல்வேலியில் 517 பேருக்கும் தென்காசியில் 173 பேருக்கும், தூத்துக்கடியில்317 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தென்காசியில் 2 பேர் சாவு
இன்று சென்னையில் மட்டும்37 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். செங்கல்பட்டில் 10 பேரும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தென்காசி, கடலூர், சேலம், தஞ்சை, வேலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், விருதுநகர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்ளில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
தென்காசியில் இன்று 120 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். திருநெல்வேலியில் 181 பேரும், தூத்துக்குடியில் 189 பேரும் இன்று குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.