May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா

1 min read

19,588 person affected for corona today in Tamil Nadu

1.5.2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று புதிதாக 19 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17,164 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 10,54,746 பேர்.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,24,24,611 ஆகும். இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,45,731 ஆகும். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 11,86,344 ஆக உள்ளது.

147 பேர் சாவு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிற்கு 147 பேர் உயிரிழந்தனர். இதில் 55 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 92 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,193 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் மொத்தம் 4791 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீண்டகால நோய்

கொரோனாவுக்கு இறப்பவர்களில் முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 114 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 33 பேர்.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.