May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று 1695 பேருக்கு கொரோனா; 11 பேர் சாவு

1 min read

1695 person affected for corona in nellai, Tenkasi, Toothukudi today

1.5.2021

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று 1695 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 11 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா


கொரோனா பரவல் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. தினமும் எல்லா மாட்டங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று 19,588 போருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 147 பேர் இன்று இறந்துள்ளனர்.
இன்றைய பாதிப்பில் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 5,829 பேருக்கும், செங்கல்பட்டில் 1445 பேருக்கும், கோவையில் 1257 பேருக்கும், திருவள்ளூரில் 779 பேருக்கும், மதுரையில் 711 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் 812 பேருக்கும், தூத்துக்குடியில் 638 பேருக்கும், தென்காசியில் 245 பேருக்கும், கன்னியாகுமரியில் 276 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று 147 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். சென்னையில் 47 பேரும், செங்கல்பட்டில் 11 பேரும, சேலத்தில் 14 பேரும், திருவள்ளூரில் 14 பேரும் இறந்துள்ளனர்.
நெல்லையில் 6 பேரும், தென்காசியில் 3 பேரும் தூத்துக்குடியில் 2 பேரும் இறந்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று மொத்தம் 1695 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று 11 பேர் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.