தமிழகத்தில் 34,285 பேருக்கு கொரோனா; தென்காசியில் 14 பேர் சாவு
1 min readCorona for 34,285 people in Tamil Nadu; 14 killed in Tenkasi
25-5-2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 468 பேர் இறந்துள்ளர். இதில் தென்காசியில் மட்டும் 14 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று மட்டும் 1,71,866 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 34,285 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,11,496 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,272 பேர் ஆண்கள், 15,013 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 11,32,479 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,78,979 ஆகவும் அதிகரித்து உள்ளது. 28,745பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,83,504 ஆக உயர்ந்தது.
468 பேர் சாவு
468 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,340 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தென்காசி
நெல்லையில் 490 பேருக்கும் தென்காசியி் 386 பேருக்கும், தூத்துக்குடியில் 682 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் இன்று 6 பேரும் தூத்துக்குடியி்ல் 8 பேரும், தென்காசியில் 14 பேரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.