தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
1 min readIn Tamil Nadu, the incidence of corona is less than 34,000
26.5.2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. நேற்று 33,764 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 475 பேர் உயிரிழந்து உள்ளனர்.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை படுவேகமாக பரவியது. கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா சற்று குறைந்து வருகிறது. நேற்று கொரோனா பதிவு 34 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. நேற்று தமிழகத்தில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்று 33,764 ஆக குறைந்தது..
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று மட்டும் 33,764 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,45,260 ஆக அதிகரித்து உள்ளது..
இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,713 பேர் ஆண்கள், 15,051 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 11,51,192ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 7,94,030ஆகவும் அதிகரித்து உள்ளது. 29,717பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,13,221ஆக உயர்ந்தது.
475 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 475பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,815ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில்..
சென்னையில் இன்று 5,223 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கோவையில் 2787 பேருக்கு்ம, செங்கல்பட்டில் 2149 பேருக்கும், ஈரோட்டில் 1642 பேருக்கும், மதுரையில் 1538 பேருக்கும், திருவள்ளூரில் 1181 பேருக்கும், திருப்பூில் 1880 பேருக்கும் விருதுநகரில் 1198 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை 505 பேருக்கும், தென்காசியில் 317 பேருக்கும், தூத்துக்குடியில் 507 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் 5 பேரும், தென்காசியி்ல் 2 பேரும் தூத்துக்குடியில் 8பேரும் இன்று கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.