கொரோனா 2வது அலையால் நாடுமுழுவதும் 577 குழந்தைகள் அனாதை ஆனார்கள்
1 min readThe 2nd wave of Corona left 577 children orphaned across the country
26-5-2021
கொரோனா 2 வது அலையில் நாடுமுழுவதும் 577 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளாகி உள்ளனர்
அனாதை
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் 577 குழந்தைகள் கடந்த 55 நாட்களில் இரண்டாவது அலைகளால் அனாதையாகிவிட்டதாக தெரிவித்து உள்ளனர்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மே 25ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, அனைத்து மாநிலங்களிலும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு
கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை பறிகொடுத்த இந்த குழந்தைகள் அனைவரும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் 10 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.