இந்தியாவில் ஒரே நாளில் 22.17 லட்சம் கொரோனா பரிசோதனைகள்
1 min read22.17 lakh corona tests in one day in India
26-5-2021
இந்தியாவில் ஒருநாளில் மட்டும் 22.17 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி மக்களை கதி கலங்க வைத்தது. எனினும், ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக தொற்று பரவல் குறைந்து வருகிறது.
இதனிடையே, தொற்று பாதிப்பை கண்டறிய இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் 22.17 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒருநாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிசோதனை எண்ணிக்கை இதுவேயாகும். நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 33 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரத்து 496- ஆக உள்ளது.