May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மராட்டியத்தில டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு 80 வயது முதியவர் சாவு

1 min read

Death of an 80-year-old man to Delta Plus Corona in the Marathas

25.6.2021

மராட்டியத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

டெல்டா பிளஸ் கொரோனா

இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டு மக்களை நிலைகுலைய செய்தது. நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறினர்.
அவை முதலில் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகளில் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்பட்டது.

கேரளா

இந்தியாவில் கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.

5 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட 4 பேர் நலமுடன் உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை நர்சு

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்ட 1,159 ஆய்வுகளில் 554 ஆய்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் சென்னையை சேர்ந்த நர்சு ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

தற்போது அவர் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டாலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதியவர் சாவு

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி, சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் கூறும்போது, மொத்தம் 21 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் இணை நோய்கள் கொண்ட 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என கூறியுள்ளார்.

இதனால், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புகளால் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது அறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.