April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆட்டுக்கறி தகராறில் நிச்சயித்த பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த வாலிபர்

1 min read

A young man who married another woman instead of the woman he was engaged to in a lamb dispute

28.6.2021-

திருமணத்தின் போது உறவினர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து போடாததால் ஆத்திரம் அடைந்த மணமகன், மணப்பெண்ணுக்கு பதிலாக வேறொரு பெண்ணை மணந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆட்டுக்கறி

ஓடிசாமாநிலம் ஜஜ்பூரரை சேர்ந்த ராமகாந்த் பத்ரா( வயது 27) என்பவருக்கு கடந்த புதனன்று சுகிந்தா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகன் மற்றும் உறவினர்கள் மணமகள் வீட்டிற்கு சென்றனர். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
பின்னர் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ஆட்டுக்கறி இடம் பெறவில்லை என மாப்பிள்ளை வீட்டில் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மணமகன் வீட்டாருக்கும் மணமகள் வீட்டாருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு ஒரு உறவினர் வீட்டில் தங்கினார். மேலும் ஆட்டுக்கறி போடவில்லை என்பதால் ராமகாந்த் அந்தப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதோடு நில்லாமல் அன்று இரவே புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ராமகாந்த் திருமணம் செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மணப்பெண்ணின் தரப்பைச் சேர்ந்தவர்கள் புகார் தந்தால், குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள் போலீசார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.